ஒரு நர்சரி பள்ளியில் பழங்கள் மற்றும் விதவிதமான இனிப்புகளை வைத்து கண்காட்சி நடந்தது. சுட்டிகள் வரிசையாகச் சென்று பார்த்தார்கள். ஓர் இடத்தில், கூடை நிறைய ஆப்பிள்கள் இருந்தன. "ஒன்றுக்கு மேல் எடுக்கக் கூடாது. கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்" என்றும் எழுதி இருந்தது.
சுட்டிகளும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு நகர்ந்தார்கள். சற்றுத் தொலைவில், ஒரு பெட்டி முழுவதும் மிட்டாய்கள் இருந்தன. அதைப் பார்த்த ஒரு சுட்டி, ஒரு தாளில் எதையோ எழுதி, பெட்டியின் மீது ஒட்டினாள். அதைப் பார்த்த மற்ற சுட்டிகள் சிரித்துக்கொண்டார்கள். அப்படி என்ன எழுதினாள் அந்த சுட்டி?
"எத்தனை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறார்!".